பாஜக பிரமுகர் கொலை வழக்கு… PFI அமைப்பினர் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை ; கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
30 January 2024, 1:14 pm

பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில பாஜகவின் ஓபிசி பிரிவு தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாஸ். இவரை கடந்த 2021ம் ஆண்டு சில மர்ம நபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 8 பேர் நேரடியாக இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் என்றும், 7 பேர் மறைமுகமாக தொடர்பில் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மவேலிக்கரா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேருக்கான தண்டனை விபரங்களை மவேலிக்கரா நீதிமன்றம் வெளியிட்டது. இந்த வழக்கின் விசாரணை 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…