Mouth Freshner சாப்பிட்ட 5 பேருக்கு ரத்த வாந்தி… 2 பேர் கவலைக்கிடம்… பிரபல உணவகத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 9:27 am

டெல்லியில் பிரபல உணவகத்தில் Mouth Freshner சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு நிலவியது.

கடந்த 2ம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் அன்கித் குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார்.

உணவகத்தில் உணவு சாப்பிட்ட நிலையில், வாய் புத்துணர்ச்சியூட்டியான Mouth Freshner-ஐ வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, 5 பேருக்கும் வாய் எரிச்சலுடன், ரத்த வாந்தி எடுத்துள்ளனர். வலியால் அனைவரும் அலறியுள்ளனர். பின்னர் தண்ணீரால் வாயை கொப்பளித்தும் அவர்களால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.

இதையடுத்து, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…