திருமணமானதால் பணியில் இருந்து நீக்குவதா? ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குக.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 5:12 pm
supreme
Quick Share

திருமணமானதால் பணியில் இருந்து நீக்குவதா? ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குக.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடாபான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது குறித்து இன்று விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது “பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Views: - 206

0

0