ஆளுங்கட்சியில் இருந்து மூத்த தலைவர் திடீர் விலகல் : பாஜகவுக்கு தாவுவதாக தகவல்.. முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு நெருக்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 8:47 pm

ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து மூத்த தலைவர் விலகியுள்ளதால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மொனுகோட் தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 3-ல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீண்டும் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் இக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான போரா நரசைய்யா கவுடு, இன்று அக்கட்சியிலிருந்து விலகினார். விரைவில் பா.ஜ.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மூத்த தலைவரின் விலகலால் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!