+1 மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களின் கொடூர செயல்.!
Author: Udayachandran RadhaKrishnan11 June 2025, 11:32 am
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சியில் கடைவீதியில் பூ விற்பனை செய்யும் தனலட்சுமி வடிவேலு தம்பதிகளுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர்.
ஒரு மகள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிரதமர் மோடிக்கு திமுக எம்பி திடீர் கடிதம்… அரசியல் கட்சிகள் ஷாக்!
அதேபோல களக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த, கண்ணன் (விஜய் மக்கள் கட்சியின் ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார்) ருக்மணி தம்பதிகளின் மகன் கௌதம் ஒன்பதாவது வகுப்பு காஞ்சிபுரம் ஆந்திரேஷன் பள்ளியில் படிக்கிறார்.
திமுக கட்சியை சேர்ந்த பாபு மாலதி அவர்களின் மகன் உதயகுமார் எட்டாம் வகுப்பு களக்காட்டூர் பள்ளியில் படிக்கின்றார். விச்சந்தாங்கல் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவரின் தகவல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் களக்காட்டூர் பகுதியை சேர்ந்த அஜய் என்ற 22 வயது வாலிபர் இந்த மூன்று மாணவர்களுடன் சேர்ந்து 11ம் படிக்கும் மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்து களக்காட்டூர் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று கேங் ரேப் செய்துள்ளனர்.

மூன்று மாணவர்களும் இந்த மாணவியை விட சிறிய வயது என்பது குறிப்பிடத்தக்கது.
மாகரல் காவல்துறையினர் இரண்டு சிறுவர்கள் மற்றும் அஜய் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று உள்ளதாகவும் மற்றொரு பள்ளி மாணவனை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் அஜய் என்பவருக்கு இந்த கேங் ரேப்பில் சம்பந்தமில்லை என்று பள்ளி மாணவி கூறியதாக தகவல் உலவுகிறது.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறியவர்கள் என்பதால் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.