தூங்கிக் கொண்டிருந்த +1 மாணவி அதிகாலையில் மாயம்… தண்டவாளத்தில் கிடந்த சடலம் : விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 1:29 pm

தூங்கிக் கொண்டிருந்த +1 மாணவி அதிகாலையில் மாயம்… தண்டவாளத்தில் கிடந்த சடலம் : விசாரணையில் ஷாக்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கல் பாதூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் இவருடைய மகள் அம்பேத்கர் பாரதி (16) என்பவர் பாதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவர் அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது மகள் காணாததால் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் பாதூர் ரயில்வே தண்டவாளத்தில் அம்பேத் பாரதி ரயிலில் அடிபட்டு சடலமாக கிடந்தார்.

இதனைப் பார்த்து பெட்ரோல் கதறி அழுது விருதாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பயந்து விசாரணை செய்து வருகின்றனர்.

பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!