12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை : பொடுகு தொல்லைக்கு பெற்றோர் செய்த செயலால் அதிருப்தியில் எடுத்த விபரீத முடிவு

Author: Babu Lakshmanan
24 August 2022, 8:49 pm

கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை அடுத்த வெண்ணமலை அரசன் நகரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் ஸ்ரீனா (17).  இவர்  வெண்ணமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஸ்ரீனாவுக்கு தலையில் பொடுகு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர் மாணவிக்கு பாப் கட்டிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பெற்றோருடன் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த போது மகளை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வீட்டினுள் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் இருந்துள்ளார். மாணவியை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது பற்றி மாணவியின் தந்தை வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!