சிதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம்… நேரில் சென்று விசாரித்த போலீஸ்… இறுதியில் காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
6 May 2023, 10:44 am

திருச்சி ; திருச்சி அருகே வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலத்தை மீட்ட போலீசாருக்கு, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.


சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் காவல்துறையின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளி முகத்தை சிதைத்து பாலத்தின் கீழ் தூக்கி வீசியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் இறந்தவர் நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்த விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி ஆற்றுப்பாலத்திற்கு கீழே மற்றொரு இளைஞர் உடல் இருப்பது குறித்து தகவல் அறிந்த ஜம்புநாதபுரம் காவல்துறையினர் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் அறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர், எஸ்.பி.சுஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேரின் கொலை செய்யப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!