ஓய்வு பெற இன்னும் 20 நாட்களே.. விசாரணைக் குழு அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட் : பெரியார் பல்கலை., பதிவாளர் சஸ்பெண்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 12:58 pm

ஓய்வு பெற இன்னும் 20 நாட்களே.. விசாரணைக் குழு அளித்த அதிர்ச்சி ரிப்போர்ட் : பெரியார் பல்கலை., பதிவாளர் சஸ்பெண்ட்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பதிவாளர் தங்கவேல் மீது பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவது, ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து புகார்கள் எழுந்தன.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை தமிழக உயர்கல்வித்துறை அமைத்தது. அந்த குழு வெளியிட்ட அறிக்கையின்படி தங்கவேல் மீதான புகாரில் 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 2 குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பதிவாளர் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பதிவாளர் தங்கவேல் பிப்ரவரி 29ஆம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • jonita gandhi shared about harrassment occured to her அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே