இனி பொருட்கள் வீடு தேடி வரும்: தமிழகத்தில் நகரும் ரேஷன் கடைகள் செப்.,21ஆம் தேதி தொடக்கம்!
18 September 2020, 10:58 pmசென்னை: தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளை வரும் 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அண்மையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்களை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகளை முதலமைச்சர் பழனிசாமி 21ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.