மர்மமான முறையில் உயிரிழந்த யானையின் வயிற்றில் 7 மாத குட்டி : பிரேத பரிசோதனையில் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 7:50 pm
Calf in Dead elephant - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் மர்மமான முறையில் இறந்த யானையின் வயிற்றில் 7 மாத கரு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் பில்லூர் அணை மானார் பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆனால் யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.

இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முதுமலை யானைகள் முகாம் வடக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தோலம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு பரிசோதனை செய்தபோது யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 7 மாத கரு இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானை தந்தத்தால் குத்திய காயம் இருந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்கு பின் பெண் யானையின் உடல் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. வயிற்றில் குட்டியுடன் இருந்த பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 789

0

0