உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2024, 1:29 pm

உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசப்பா(57). இவரை கடந்த 2017ம் ஆண்டு பேரக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன்(31) என்பவர், வெங்கடேசப்பா என்பவரை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தேவகாணப்பள்ளி என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள தைலந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே லட்சுமிநாராயணன் என்பவரின் நண்பர்களான பசவராஜ்(30), சந்தோஷ் குமார்(30) ஆகியோர் ஏற்கனவே காத்திருந்து வெங்கடேசப்பாவை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது

வெங்கடேசப்பா பணம் கொடுக்க மறுத்ததால் மூவரும், கத்தியால் குத்திக்கொலை செய்து 8550 ரூபாய் பணத்தை திருடி சென்றதாக தளி போலிசார் வழக்குப்பதிவு செய்து

இந்த வழக்கு ஒசூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தநிலையில் நீதிபதி திருமதி ரோஸ்லின் துறை அவர்கள் லட்சுமிநாராயணன், பசவராஜ்,சந்தோஷ் குமார் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிருபணம் செய்து மூவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்..

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…