கோவை ரயில் நிலைய தண்டவாளத்தில் துண்டாக கிடந்த கை..!

Author: kavin kumar
11 February 2022, 8:40 pm

கோவை: கோவை ரயில் நிலைய தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் கை துண்டாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கக்கூடியது கோவையில் இருந்து உள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு வெளிமாநிலங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை ஐந்தாவது பிளாட்பாரத்தில் பயணிகள் ரயில் கடந்து சென்றது. அதனைத்தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் வலது கை துண்டாகி பிளாட்பாரத்தில் ரத்தத்தில் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சென்று அந்த துண்டாகி கிடந்த வலது கையை எடுத்து யாருடைய வலது கை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் செல்லக் கூடியவர் கவனக்குறைவாக கையை வெளியே நீட்டி அதில் கை துண்டானதா? ஏதாவது பிரச்சனையில் கை வெடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!