“எதற்கும் ஒரு எல்லை உண்டு” கடுங்கோபத்தில் சமந்தா போட்ட டுவிட்டர் பதிவு வைரல்..!

Author: Rajesh
23 April 2022, 11:39 am
Quick Share

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இந்தியா முழுவதும் பேசுபொருளானார். இதனிடையே சமந்தா நடித்த காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான தனது 4 வருட திருமணத்தை முடித்துக்கொண்டார். இந்த சம்பவம் தென்னிந்திய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
சமந்தா விவாகரத்துக்குப் பிறகு நிறைய ட்ரோல்கள், துஷ்பிரயோகங்கள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டார், ஆனால் சமந்தா இதையெல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளாமல் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தார். சரியான விமர்சனங்கள் வரும்போது அமைதியான வழியில் தன் நிலைப்பாட்டை விளக்கியிருந்தாலும், அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், தனது மனநிலையை இழந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

சமந்தா தனது ட்வீட்டில், ‘என்னுடைய மௌனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணை பலவீனம் என்றும் தவறாக நினைக்காதீர்கள். கருணைக்கு ஒரு காலாவதி தேதி இருக்கலாம் #JustSaying” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை யாரை குறிவைத்து ட்வீட் செய்தார் என நெட்டிசன்கள் யோசித்து வருகின்றனர்.

Views: - 1403

52

14