கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆசி பெற்ற கோவை மாநகராட்சி 38 வார்டு அதிமுக வேட்பாளர்
Author: kavin kumar14 பிப்ரவரி 2022, 10:03 மணி
கோவை : கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோவை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் சந்தித்து ஆசி பெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஷர்மிளா சந்திரசேகர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.சாலையோர வியபாரிகள், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியா வளாகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை கோவை மாநகராட்சி 38 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் உடனிருந்தார்.
0
0