பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ்.. மரத்தில் மோதி கோர விபத்து : கர்ப்பிணி உட்பட இருவர் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2022, 12:42 pm

சிவகங்கை : சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான நிலையில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இளையாங்குடி அருகே நெஞ்சாத்தூரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி நிவேதா. கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடன் அவரது தாய் விஜயலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர்கள் சென்றனர்.

ஆம்புலன்ஸ் ஊத்திக்குளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், தொழில்நுட்ப அலுவலர் சத்யா மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!