பாரதியார் பல்கலை., வளாகத்தில் நுழைந்த யானை.. பயந்து ஓடிய காவலாளி.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2024, 6:51 pm

பாரதியார் பல்கலை., வளாகத்தில் நுழைந்த யானை.. பயந்து ஓடிய காவலாளி.. அடுத்த நிமிடம் நடந்த அதிர்ச்சி!

கோவை வடவள்ளி அடுத்த பாரதியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணியாற்றி வருபவர் சண்முகம் (57) இவர் இன்று காலை 10.30 மணியளவில் காவல் பயணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்பொழுது வனபகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை வெளியேறியது. இதனை கண்ட சண்முகம், தப்பிக்க முயன்றார். இதில் கால் இடறி விழுந்ததில் காயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்ட சக பணியாளர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் பயத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஒற்றை காட்டு யானையை விரட்ட சம்பவ இடத்திற்கு வனத்துறை ரேஞ்சர் திருமுருகன், வனத்துறை உதவி ஆய்வாளர் ஐயப்பன், உள்ளிட்ட வனத்துறை குழுவினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: இனி ஆக்ஷன் தான்..ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. தமிழ்நாடு அரசு அனுப்பிய சுற்றறிக்கை!

மேலும் ட்ரோன் உதவியுடன் யானை எங்கு உள்ளது என தேடினர். பட்டாசுகள் வெடித்தும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆர் எஸ் புரம் உதவி ஆணையர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இச்சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வடவள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!