ராஜ்பவனில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி: அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு..!!

Author: Rajesh
14 April 2022, 7:29 pm
Quick Share

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியார் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்புவிழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலையை திறந்துவைத்தார்.

ஆளுநர் மாளிகையை பெறுத்தவரை சுதந்திரத்திற்காகவும், தமிழுக்காகவும், பெண் உரிமைக்காகவும் போராடிய தலைவர்களின் சிலை ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்தது. ஔவையார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆளுநர் மாளிகையில் திறக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில், தற்போது பாரதியார் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திமுக, விசிக, காங்கிரஸ், கம்ப்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன. அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளன.

Views: - 541

0

0