CM ஸ்டாலினின் மருமகனிடம் ரூ.30 ஆயிரம் கோடி… நான் சொல்லல ; அவங்க தான் சொன்னாங்க… எப்படி வந்துச்சு இவ்வளவு பணம் ; எச்.ராஜா கேள்வி..!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 4:37 pm

காரைக்குடி ; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது ;- வருமான வரித்துறையினரின் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் ஆதாரங்கள் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் இரண்டு நாட்களாக செந்தில் பாலாஜி வீட்டிலும், அலுவலகத்திலும் தலைமைச் செயலகத்திலும் சோதனை செய்து அவரை கைது செய்தனர். இது சட்ட பூர்வ நடவடிக்கை.

ப. சிதம்பரம் 108 நாள் ஜெயிலில் இருக்கும் போது கூ காங்கிரஸ் கட்சியினர் இதுபோல் உருட்டவில்லை. மணீஷ் சிசோவிடியாவுக்கு கெஜ்ரிவால் கூச்சல் போட்டதை விட இப்பொழுது அதிகமாக போடுகிறார். திமுக ஒரு நாடகமே நடத்துகிறது. மக்களுடைய சிம்பத்தி பெறலாம் என்று திமுக நினைக்கிறது. முதலமைச்சர் பொறுப்பற்ற தன்மையில் பேசுகிறார். மத்திய அரசுக்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.

கருப்பு பலூன் விட வில்லை, கோபேக் மோடி சொல்லவில்லை, ஒன்றிய அரசு என்று மத்திய அரசை இழிவு படுத்தி பேசவில்லை. ஆனால் நவீன் பட்நாயக் அந்த மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இருக்கிறார். ஸ்டாலின் அவர்கள் பின்பற்ற வேண்டிய முன் உதாரணம். நவீன் பட்நாயக்காக இருக்க வேண்டும். வெற்றி கொண்டானாக இருக்கக் கூடாது.

தற்போது பத்திரிக்கை, சமூக ஊடகங்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை நீங்கள் அனைவரும் ஒளிபரப்பு செய்து உள்ளீர்கள். Dr கிருஷ்ணசாமி புகார் அளித்துள்ளார். இதனால் இவை அனைத்தும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இதை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக செய்கின்றனர். தற்போது, நடப்பதை பார்ப்போம்.

20 வருடங்களுக்கு முன்பு உள்ள கருணாநிதியின் கைது ஞாபகத்திற்கு வருகிறது. செந்தில் பாலாஜி நேற்று மாலை பத்திரிகையாளர் சந்திக்கிறார். இதனால் சந்தேகம் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் டாக்டர்களை கொண்டு மருத்துவம் பார்க்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் உண்மை தெரிய வரும்.

காங்கிரஸ் காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வில் முதல் மார்க் வாங்கிய மாணவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். நீட்டில் முதல் 10 இடத்தில் பெற்றவர்களில் நான்கு மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். இந்த உண்மையெல்லாம் மாணவர்களுக்கு தெரியும். ஒரு குடிகாரர்கள் கூட சிம்பத்தி இருக்காது. அவர்களுடைய பத்து ரூபாய் பெற்றவர்கள்.

செந்தில் பாலாஜி நான் லஞ்சம் வாங்கினேன், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என்று தமிழ்நாடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் 25 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கை செய்ய வேண்டும். இல்லை என்றால் உச்சநீதிமன்றமே விசாரணை செய்யும் என்று கூறிய பின்பு, இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

மக்கள் பணத்தை திருடக்கூடாது. கருணாநிதிக்கு எவ்வளவு சொத்து இருந்தது. மாறன் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருந்தது. தற்போது மருமகன் சபரீசனுக்கு முப்பது ஆயிரம் கோடி ரூபாய். நான் சொல்லவில்லை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். பிஜேபி சொல்லவில்லை, உங்கள் மீது உங்கள் மந்திரிகளால் குற்றச்சாட்டு வைத்து விடப்பட்டுள்ளது. மக்களின் சிம்பத்தியை பெறுவதற்காக அநாகரிக அரசியல் செய்ய வேண்டாம், என்று தெரிவித்தார்

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…