பாஜகவை பற்றி அவதூறாக பேசினால்… முன்னாள் நிர்வாகி சரவணனுக்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 5:55 pm

முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் பாஜக பற்றி அவதூறு பரப்பினால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் அதிமுக, மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு மாறி, தற்போது மீண்டும் திமுகவில் இணைய உள்ளார். இந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை அவர்கள் மதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

சிறுபான்மையிருக்கான முழு உரிமையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவமும் தமிழக பாஜக சிறப்பாக வழங்கி வருகிறது. குறிப்பாக, என்னை போன்ற முஸ்லிம்கள் பாஜகவின் கொள்கைகள் ஈர்க்கப்பட்டு தான் இணைந்துள்ளோம். பாஜக முஸ்லிம் மதத்தில் உள்ள குர்ஆன் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதைப் போலத்தான் சிறப்பாக செயல்படுகிறது.

இது போன்று அவதூறு செய்திகளை பரப்பும் சரவணன் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுபான்மை பிரிவு தொண்டர்கள் அனைவரும் சரவணன் வீட்டை முற்றுகையிட்டு விடுவோம்.

சிறுபான்மை பிரிவினருக்கு முத்தலாக் போன்ற சிறப்பான சட்டங்கள் மூலம் பாஜக முஸ்லிம் பெண்களை மதிக்கிறது. அது மட்டும் அல்ல, அது தலாக் போன்ற சட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்கள் இச்சட்டத்தை வரவேற்கின்றனர், என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?