சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
Author: Aarthi Sivakumar24 August 2021, 9:12 am
சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 27ம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
0
0