திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி கொலை… திடீரென எழுந்த சந்தேகம் ; மற்றொரு ரவுடி கும்பல் செய்த வெறிச்செயல்..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 3:43 pm
Quick Share

சென்னையில் மனம் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கொளத்தைச் சேர்ந்தவர் குண்டு சதீஷ் என்று அழைக்கப்படும் சதீஷ். பிரபல ரவுடியான இவர் மீது காவல்நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக ரவுடிசம் ஏதும் செய்யாமல் மனம் திருந்தி வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உட்வார்ப் கால்வாய் ஓரம் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற ஏழு கிணறு போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட குண்டு சதீஷ் என்பது தெரிய வந்தது. மேலும், திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி சதீஷ், போலீசாரின் இன்ஃபார்மர் என்ற சந்தேகம் மற்ற ரவுடி கும்பலுக்கு எழுந்திருக்காலம் என்றும், இதன் காரணமாக அவரை படுகொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், இட்டா அஜித் தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பலுக்கு சதீஷின் கொலை சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 406

0

0