கோவையில் ஓடஓட வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் : அரக்கோணத்தில் 4 பேர் சரண்..!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 8:36 am

ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி (32). ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 12ம் தேதி ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர் . அந்த கும்பல் வந்த வேகத்தில் சத்திய பாண்டியை சுற்றி வளைத்து கத்தியால் வெட்டினர் .

அப்போது அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடி அங்குள்ள வீட்டுக்குள் புகுந்தார். அப்போதும் அந்த கும்பல் சத்திய பாண்டியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இந்நிலையில் அரக்கோணம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சாய்ரா பானு முன்னிலையில், கோயம்புத்தூர் தீதி பாளையத்தைச் சேர்ந்த காஜா உசேன்(23), செல்வபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23 ), அதே பகுதியைச் சேர்ந்த சல்பான்கான் (22), நாகர்கோவில் கிருஷ்ணர் கோயிலைச் சேர்ந்த ஆல்வின் (37) ஆகிய 4 பேர் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் கோர்ட் காலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இச்சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்