ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை அழைத்துச் சென்ற கல்லூரி மாணவர்.. போக்சோவில் கைது செய்த போலீஸார்..!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 6:09 pm

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த 11-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக்கு கூறி நேற்று வெளியே அழைத்துச் சென்றுள்ளார். மாலை நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் நிலையத்தினர், பீளமேடு பகுதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இருவரையும் அழைத்து வந்து, சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கல்லூரி மாணவன், பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் கல்லூரி மாணவன் அருள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…