போதையில் தள்ளாடும் தமிழகம்… ஆன்லைன் சூதாட்டம் மூலமாக CM ஸ்டாலினுக்கு கமிஷன் : ஆதாரத்துடன் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2022, 11:53 am

தமிழகம் தற்போது போதையில் தள்ளாடுகிறது, எங்கு பார்த்தாலும் கஞ்சா,மது விற்பனை, வன்கொடுமைகள் தான் நடைபெறுகிறது என நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

போதையில் தள்ளாடும் தமிழகம்… ஆன்லைன் சூதாட்டம் மூலமாக CM ஸ்டாலினுக்கு கமிஷன் : ஆதாரத்துடன் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு!!

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கழக துணை பொதுச்செயலாளரும் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் போது கள்ளச்சாராயம், கஞ்சா, மது உள்ளிட்டவைகள் தற்போது எங்கு பார்த்தாலும் விற்பனை செய்யப்படுவதாகவும், தமிழகம் தற்போது மது போதை மற்றும் கஞ்சா போதையில் தள்ளாடுவதாகவும் கூறினார்.

மேலும் மது போதையால் தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன என்றும், அதேபோன்று ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்பதாக கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு ஆன்லைன் சூத்தாட்டத்தில் இருந்து கமிஷன் வருகிறது. தமிழகத்தில் விளம்பர ஆட்சி தான் நடைபெற்று வருவதாகவும், நிர்வாகம் என்ற அடிப்படையைக் கூட அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

போதையில் தள்ளாடும் தமிழகம்… ஆன்லைன் சூதாட்டம் மூலமாக CM ஸ்டாலினுக்கு கமிஷன் : ஆதாரத்துடன் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு!!

மேலும் தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதிமுக 200 இடங்களுக்கு மேல் அமோக வெற்றி பெறும் என பொதுக்குழு கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆர். வி. கண்ணன், கன்னிவாடி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள், ஆத்தூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், கலந்துகொண்டனர்

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?