நேற்றைய பாதிப்பை விட தலைநகரில் இன்று அதிகரித்த தொற்று : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2021, 7:49 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது.
கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 740 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,24,731ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, இன்று கோவையில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னையில் 105 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,454 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 765 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 79 ஆயிரத்து 895ஆக அதிகரித்துள்ளது.
0
0