ஐஸ்வர்யாவுக்கு ஐலவ்யூ…. மீண்டும் தனுஷ் கூறிய PROPOSE : மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 9:08 pm
Dhanush Ishwarya - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவை 48 வருடங்களாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி . தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர். 70 வயதானாலும் சினிமாவில் வெற்றியை ருசித்து வரும் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல துன்பங்கள் நெருடி வருகிறது.

இளைய மகள் சௌந்தர்யாவின் வாழ்க்கையால் சந்தோஷத்தை இழந்த ரஜினி, முதல் கணவரை பிரிந்த சௌந்தர்யாவுக்கு இரண்டாவதாக நல்ல வரன் அமைந்ததால் சற்று நிம்மதியடைந்தார். ஆனால் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் விவகாரத்தால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளா ரஜினி.

நன்றாக சென்ற ஐஸ்வர்யா தனுஷ் வாழ்க்கையில் இடையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஆனால் எல்லாவற்றையும் ரஜினி சமாளித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை ரஜினி பேசி சமாதானம் செய்தார்.

ஆனால் பிரிவதாக இருவரும் இரவு நேரத்தில் அறிவித்து விட, அடுத்த நாள் காலை யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து ரஜினி வெளியேறியுள்ளார். காலை முதலே ரஜினி வீட்டில் இல்லாததால், ஊடகத்தினரும் எங்கே சென்றார் என அரசல் புரசலாக தகவலை வெளியிட்டிருந்தனர்.

Dhanush-Aishwarya divorce: क्यों 18 साल बाद टूटा धनुष-ऐश्वर्या का रिश्ता,  इंसाइडर ने बताई असली वजह - News AajTak

பின்னர்தான் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்தால் ரஜினி வீட்டில் இல்லாததன் காரணம் புரிந்தது. ரஜினிக்கு வேண்டியவர்கள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், நண்பர்கள் என தனுஷ் – ஐஸ்வர்யாவிடம் பஞ்சாயத்து பேசினர்.

Shocking! Dhanush, Aishwaryaa announce split after 18 years of marriage |  People News | Zee News

ஐதராபாத்தில் தனி தனித்தனி தனியார் ஹோட்டலில் பணி நிமித்தம் காரணமாக தங்கியிருக்கும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிடம் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இருவரும் சிறு பிரச்சனையில் தான் உள்ளனர், அது விரைவில் சரி செய்துவிடுவார்கள்.. இது விவாகரத்து வரை போகாது என கூறினார்.

No personal grudge or hatred, claims family friends, what's the reason  behind Dhanush- Aishwarya divorce? - CINEMA - CINE NEWS | Kerala Kaumudi  Online

மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மகன்களின் நலன் கருதி இருவரும் சமாதானம் ஆக கூறி வந்தனர். இந்த நிலையில் இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தனுஷ் நடிக்கும் மாறன் படத்தில் முதல் பாடல் வீடியோ வெளியானது. ஏய் பொல்லாத உலகம் என தொடங்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Rajinikanth 'Very Badly' Affected By Aishwaryaa R-Dhanush's Split, Urges  Her To Mend Marriage: Report

இந்த பாடலில் நடுவே வரும் வரிகளான ஏன் வழி புடிச்சாலும் ஐலவ்யூ, நீ என்ன வெறுத்தாலும் ஐலவ்யூ என்ற வரிகள் முதலில் இல்லை. பின்னர் தனுஷ் பாடலாசிரியர் விவேக்கிடம் இது போன்ற வரிகள் வேண்டும் என கேட்டு மீண்டும் தனுஷ் பாடி ரீ ரெக்கார்டிங் செய்து கொடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Dhanush, Aishwarya announce separation after 18 years; Rajinikanth shocked

ஐஸ்வர்யாவை நினைத்து தனுஷ் பாடல் வரியை சேர்க்க கூறியதால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ விரும்புவதாக ரஜினிக்கு தகவல் சென்றடைந்துள்ளது. மாப்பிள்ளை சமாதானம் ஆகிவிட்டதால் இனி மகளையும் சமாதானப்படுத்திவிடலாம் என மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீருடன் தனது நண்பர்களிடம் ரஜினி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 4202

203

57