ஆஸ்திரேலிய தொழிலதிபருடன் கும்மாளம் போட்ட பாலாவின் முன்னாள் மனைவி: என்கிட்ட ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பும் பயில்வான்..!

Author: Vignesh
27 September 2022, 6:45 pm
Quick Share

இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவியான முத்துமலர் ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் அடுக்குமாடி குடியிருப்பில் கும்மாளம் போட்டதாக பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பியுள்ளார்.

இயக்குநர் பாலாவின் முன்னாள் மனைவியான முத்துமலர் ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் அடுக்குமாடி குடியிருப்பில் கும்மாளம் போட்டதாக பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா, உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ள பாலா, தற்போது சூர்யாவின் வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் பாலா 2004ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.

பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து ஏற்பட அரசியல் பிரமுகர் ஒருவரின் மகன்தான் காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் பல பகீர் தகவல்களை கூறியுள்ளார். அதாவது, விவாகரத்துக்கு காரணம் ஆஸ்திரேலிய தொழில் அதிபர்தான் என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இதுதொடர்பான வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இயக்குநர் பாலாவும், அவரது மனைவியான மலரும் விவாகரத்தில் உறுதியாக உள்ளனர். விவாகரத்துக்கு காரணம் பாலாவின் மனைவிக்கு அரசியல் பிரமுகரின் மகன் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்புதான் காரணம் என பேசப்பட்டது. தற்போது புதியதகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் பிரிந்துள்ள நிலையில் மலர், பாலா தங்கியுள்ள குடியிருப்பில்தான் வசித்து வருகிறார். மே 8 ஆம் தேதி அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு ரமேஷ் ராஜ் என்ற ஆஸ்திரேலிய தொழிலதிபர் வந்துள்ளார். ரமேஷ் ராஜ்க்கு முதலில் பாலாவுடன்தான் நெருக்கம் ஏற்பட்டது. ரமேஷ் ராஜ் வெளிநாடுகளில் உள்ள சுரங்கங்களில் வேலை பார்க்க ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறார்.

சென்னையில் அவரது நிறுவனத்துக்கான கிளையை இயக்குநர் பாலாவின் மனைவியான முத்து மலர்தான் தொடங்கி வைத்தார். அதன்பிறகு பாலாவின் மனைவிக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. ரமேஷ் ராஜ் வசதியான பார்ட்டி என்பதால் அவருடன் நெருக்கமாகிவிட்டார் மலர். இந்த விஷயம் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தெரிந்து கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு அடையாறு சிஷ்யா பள்ளி அருகே உள்ளது. மே 8ஆம் தேதி அந்த குடியிருப்பில் மலரும் ரமேஷ் ராஜும் கும்மாளம் போடுவதை அறிந்த பாலா தனது ஆட்களை அனுப்பி அந்த தொழிலதிபரை அடித்து உதைத்துள்ளார். இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குடியிருப்புக்கு வந்த மகளிர் போலீஸ் வழகுப்பதிவு செய்தனர்.

இந்த விவரத்தை கேள்வி பட்ட மலர், வெளியில் தெரியவேண்டாம் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என கேஸை வாபஸ் வாங்கும்படி கூறி வாபஸ் வாங்க வைத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் மலர் தொழில் அதிபருடன் கும்மாளம் போட்டதையும் பாலா ஆட்களை அனுப்பி ரகளை செய்ததையும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒருவர்தான் எனக்கு கூறினார்.

அதற்கான சான்று என்னிடம் உள்ளது. இது பொய்யான தகவல் இல்லை. இதனால் இருவரும் விவகரத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு திரைப்பட இயக்குநருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதி இல்லாவிட்டால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் பாலா இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்கிறது. இவ்வாறு நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 696

1

1