சாதிப் பெயர் கூறி 6ஆம் வகுப்பு மாணவனை அவமதித்த சக மாணவர்கள் : தீயில் தள்ளி விட்டு கொடூரச்செயல்.. பெற்றோர் கண்ணீர் மல்க புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2022, 2:59 pm
Student Fire -Updatenews360
Quick Share

விழுப்புரம் : 6 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொள்ள முயன்றதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 39). பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர்.

இவரது மகன் சுந்தர்ராஜன் (வயது 11), அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு சுந்தர்ராஜன் பள்ளிக்கு போகும்போது சாதி பெயரை சொல்லி அழைத்து, அவமானம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சுந்தர்ராஜன் அவரது தந்தையிடம் தெரிவித்ததன் பேரில், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்து சுந்தரராஜன் தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கருமகாரிய கொட்டகை அருகே நின்றிருந்த 3 பேர் சிறுவனை ‘வில்லி பையா இங்க வாடா’ என்று அழைத்து அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் சிறுவனை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நெருப்பில் விழுந்து படுகாயமடைந்த சுந்தர்ராஜனை அங்கிருந்த மூன்று பேரில் இரண்டு பேர் அழைத்துச்சென்று வீட்டில் விட்டுள்ளனர். பின்னர் சிறுவனின் தாய் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 598

0

0