மயங்கிய இடத்திலேயே உயிரை விட்ட பெண் யானை : இரண்டு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 6:47 pm
Elephant Dead -Updatenews360
Quick Share

கோவை : 2வது நாளாக யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியார் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் நேற்று படுத்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.மயங்கி விழுந்துள்ள யானைக்கு கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், இரத்த நாளம் வழியாக 40 க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்துகளும், உப்பு வெந்நீர் ஒத்தடம் ஆகியவையும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து யானை படுத்துள்ள பகுதியை சுற்றிலும் சாமியானா பந்தல் போடப்பட்டு நிழல் ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, 2வது நாளும் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து.

Views: - 904

0

0