தமிழகத்திற்கு கனமழை அலர்ட்: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…உங்க மாவட்ட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!
Author: Aarthi Sivakumar29 October 2021, 10:43 am
சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலியாக நெல்லை, திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், திருவாரூர் ஆட்சியர் காயத்ரி மற்றும் நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அறிவித்துள்ளனர். இதேபோன்று கனமழை எதிரொலியாக, தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகை மற்றும் மயிலாடுதுறையிலும், புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0
0