மாணவர்களோடு அமர்ந்த மாண்புமிகு மாணவன் : தவெக சார்பில் விருது வழங்கும் விழாவில் விஜய் செய்த செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 10:30 am

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா தொடங்கியது.

திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு அதிகாலையிலேயே வருகை வந்த விஜய் சுமார் 10 மணி அளிவில் விழா நடைபெறும் மேடைக்கு வருகை வந்தார்.

விஜய் வந்ததும் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து கோஷம் எழுப்பினர். மாணவர்கள் வரிசையில் முன்னிருக்கையில் விஜய் அமர்ந்தார்.

முதலில் விழா தொடங்கும் விதமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்பு மாணவர்கள் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  • many production companies are applying for the title operation sindoor போரே முடியல, அதுக்குள்ள இப்படியா? ஆபரேஷன் சிந்தூரை திரைப்படமாக எடுக்க முந்தியடிக்கும் தயாரிப்பாளர்கள்!