4 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு : சென்னையை முந்த முயலும் கோவை? இன்றைய கொரேனா நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 8:30 pm

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

ஒரே நாளில் 23,084 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,66,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,666 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1751 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 1426 பேருக்கும், செங்கல்பட்டில் 1097 பேருக்கும், திருப்பூரில் 1017 பேருக்கும், சேலத்தில் 578 பேருக்கும், ஈரோட்டில் 689 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!