கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 1:57 pm
CV Shanmugam
Quick Share

கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்!

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு: இந்தியா முழுவதும் கடுமையாக விலைவாசி விலை உயர்ந்துள்ளது மோடி பத்து ஆண்டு காலம் ஆட்சிக்கு வந்து இந்த கண்டாச்சிபுரத்தில் யாருக்காவது அரசு வேலை கிடைத்ததா டெல்லில இருக்கிற மோடி பிரதமராக வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை சொன்னார்.

ஒரு ஆயிரம் பேரூக்காவது வேலை கொடுத்தாரா கொடுக்க முடிந்ததா மாநிலம் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா இல்ல தொழில் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா ?

இந்தியாவிலேயே தமிழகத்தில் 8000 தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கிறது இத நான் சொல்லல ஒன்றிய அரசு ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டது, அப்புறம் எப்படி நீங்க வேலை கொடுப்பீங்க இந்த ஆட்சியில் யார் நல்லா இருக்கிறார்.

மோடியுடைய ஆட்சியில இந்தியாவிலே இரண்டே பேர் தான் ஒன்னு அம்பானி இன்னொன்னு அதானி வேற யாரும் நல்லா இல்ல தமிழ்நாட்டில் யார் நல்லா இருக்குது நீங்க நல்லா இருக்கீங்களா.

இன்னைக்கு சொல்றாங்க மோடியும் திமுகவும் ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு பேசுறாங்க கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு மோடிக்கும் எந்தத் தகுதியும் இல்லை திமுக பேசுவதற்கு அருகதை இல்லை

இன்னைக்கு புதுசா சொல்ற மோடி 2014ல் இருந்து பத்து ஆண்டு காலமாக பிரதமர் மோடி இப்பதான் கச்சத்தீவு பற்றி தெரியுதா உலகம் முழுவதும் சுத்துறாரு.

இருக்கிற மீனவர்களை அடிச்சு கொல்றான் சாவடிக்கிறாங்க தினம்தோறும்தூரம் கைது பண்றாங்க படகுகளை அடித்து நொறுக்குறான் அப்பலாம் தெரியாதா மோடிக்கு இப்ப தேர்தல் வரும் போது மட்டும் தான் கச்சத்தீவு பற்றி தெரியுது என்ன நடவடிக்கை எடுத்தாங்க.

இந்த பத்து ஆண்டு காலம் இந்த கச்சத்தீவு பிரச்சனைக்காக என்ன நடவடிக்கை எடுத்தார் என்ன பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது இந்த பாரதிய ஜனதாக்கு என பேச்சு இந்தப் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Views: - 357

0

0