அமைச்சரின் தம்பி வீட்டில் மீண்டும் ரெய்டு… கரூரில் சுற்றி சுற்றி 7வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறையினர்..!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 8:37 pm
Quick Share

கரூர் ; கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில், கடந்த 26ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பெண் அதிகாரி காயத்ரி உள்ளிட்ட நான்கு வருமானவரித் துறை அதிகாரிகளை, நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், அசோக்குமார் வீட்டில் நடத்தவிருந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அசோக் குமாரை நேரில் ஆஜராக சொல்லி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ஏழாவது நாளாக ஏற்கனவே 3 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, தற்போது அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Views: - 370

0

0