சந்தில் தனியாக நின்று கட்டா கட்டாக எண்ணிய நபர்… ரோந்து பணியில் வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2023, 9:28 pm

மதுக்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மதுக்கரையை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலிசார் பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

  • தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை? தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?