குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்தி கொலை : தாய், மகன் கைது
Author: Babu Lakshmanan27 August 2021, 4:58 pm
கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி : குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான இவரது தாய் கடந்த 23ஆம் தேதி குலசேகரத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தியபோது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனது தாயை யாரும் கவனிக்காததால் உயிரிழந்ததாக தனது அண்ணன் ராஜன் என்பவரது மனைவி விஜிலாவிடம் கூறியுள்ளார்.இதில் சுரேஷ் வீட்டாருக்கும், ராஜன் வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
நேற்று இரவு சுரேஷ் தனது அண்ணன் ராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ராஜனின் மனைவி விஜிலா மற்றும் அவரது மகன் அல்டின் ரிஜாஸ் சுரேசை தாக்கியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த வெந்நீரை எடுத்து சுரேஷ் மீது விஜிலா ஊற்றியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
சுரேஷ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் நடந்த தக்கலை சரக டிஎஸ்பி தாய் மகனை கைது செய்ததுடன் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0