குளித்துக் கொண்டிருந்த தாயை குழிக்குள் தள்ளிய மகன்… அடித்து துன்புறுத்திய கொடூரம் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 2:58 pm

குமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே சொத்து பிரச்சனையில் தாயாரை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மா (73). வயதான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் லாரன்ஸுக்கும், இளைய மகனுக்கும் இடையே சொத்து தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறத்தில் குளித்துக்கொண்டிருந்த தாயார் வள்ளியம்மாவை அவரது மகன் லாரன்ஸ் கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை அவரது இளைய மருமகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அவரையும், லாரன்ஸ் தாக்கி காயப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!