அரசுப் பள்ளி அருகே ஆண் சடலம்… முகம் சிதைந்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2024, 1:29 pm

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு, 16 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம், முகம் சிதைக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பென்னாகரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் பென்னாகரம் அருகே உள்ள பண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட திப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பெருமாள் மற்றும் குமுதா ஆகிய தம்பதியினரின் மூத்த மகன் யாதவன் என தெரிய வருகிறது. யாதவன் பண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்

கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திப்பட்டியில், பெருமாள் குமுதா ஆகியோர் கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குமுதா கோபித்துக் கொண்டு, தனது தாய் வழியில் உறவினர் வீடான தாசம்பட்டிக்கு வந்துள்ளார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இளைய மகன் வால்பாறையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது பாட்டி வீட்டில் இருந்த யாதவன், திப்பட்டிக்குச் சென்று தனது தந்தையை சந்தித்து விட்டு வருவதாக நேற்று மாலை கூறி சென்றவன், இன்று காலை தாசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மர்மமான முறையில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பென்னாகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!