தீராத சந்தேகம்… இரண்டு குழந்தைகள் கொலை : தாய் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய விழுப்புரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 4:25 pm

தீராத சந்தேகம்… இரண்டு குழந்தைகள் கொலை : தாய் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய விழுப்புரம்!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர் பகுதியில் வசித்து வரும் கோபிநாத்தின் மனைவி பென்னரசி அவரது வீட்டில் தனது 7 வயது மகள் கிருத்திகா, 4 வயது மகன் மோனிஷ் ஆகிய இரண்டு பேரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் செல் போனில் அதிகம் நேரம் மனைவி பென்னரசி பேசுவதால் அடிக்கடி கணவர் கோபிநாத் மனைவி மீது நடத்தையில் சந்தேகம் இருந்தால் தற்க்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • kayadu lohar talks about situation ship going viral என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?