திருமணமான 3 நாளில் மாயமான புதுப்பெண்: கணவர் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Rajesh
10 February 2022, 4:03 pm
Quick Share

கோவை: கோவையில் திருமணமான 3 நாட்களில் புதுபெண் மாயமான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என் புதூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்யும் பெண்ணிற்கும், ஒர்க் ஷாப் தொழிலாளி ஒருவருக்கும் கடந்த 6ம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர். திருமணமான 3 நட்களில் புதுபெண் மாயமானது சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 866

0

0