கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ள திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்துள்ளனர் : எஸ்பி வேலுமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 5:53 pm

கோவை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டு பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு படிவங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தவில்லை. 12 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என சட்டத்தை கொண்டு வந்தார்கள் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்புக்கு அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி போன்ற உத்தரவுகள் வெளியிடப்பட்டது. மின்கட்டணம், சொத்துவரி உயர்வு போன்ற பிரச்சனைகளால் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் தெளிவாக உள்ளனர்.

சம்பாதித்த பணம் 30 ஆயிரம் கோடியை எங்கு வைப்பது என நிதி அமைச்சரே ஆடியோ வெளியீட்டு வாக்கு மூலம் அளித்துள்ளார். கொள்ளையடிப்பது மட்டும் தான் இந்த ஆட்சியின் பணியாக உள்ளது.

ஆடியோ விவகாரத்தில் உண்மை தன்மை அறிய சிபிஐ தேவை என விசாரணை அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு உத்தரவிடுவார்கள் என்று எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!