வாழைப்பழமாச்சு கிடைச்சுதே : முதலமைச்சர் ஸ்டாலின் வருகைக்காக அலங்கரிக்கப்பட்ட வாழை தார்களை அள்ளிச்சென்ற மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 1:56 pm
Banana - Updatenews360
Quick Share

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவர் வருகைக்காக சுமார் 500 மீட்டர் தொலைவு வரை பந்தல் அமைத்து வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி முடிந்த பின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த மக்கள் வாழை தார் மற்றும் இளநீர்களை பறித்து கொண்டு,தலையில் வைத்து செல்லும் காட்சி.

Views: - 393

0

0