கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு…காட்டிக்கொடுத்த சிசிடிவி வீடியோ: இந்து முன்னணி ஆதரவாளர்கள் 2 பேர் அதிரடி கைது!!
Author: Aarthi Sivakumar11 January 2022, 11:28 am
கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவிய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்தும் காவி பொடி தூவியும் அவமரியாதை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. அவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெவ்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த
நிலையில் பெரியார் சிலையை அவமதித்த வெள்ளலூரை சேர்ந்த இந்து முன்னனியை ஆதரவாளர் அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரை போலிசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
0
0