59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை இவ்வளவு அதிகரிப்பா?: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!!
20 November 2020, 8:22 amசென்னை: 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் பெட்ரோல், கடந்த 59 நாளாக விலையில் மாற்றமின்றி, லிட்டர் 84.14 ரூபாய்க்கும், டீசல் 49வது நாளாக விலை மாற்றமின்றி, லிட்டர் 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஒரு மாதத்திற்கும் மேலாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0