55 வழக்குகளில் தேடப்பட்டு வந்த அரசியல் பிரமுகர் : வாகன தணிக்கை போது அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2024, 10:47 am

சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த பிரம்ம மூர்த்தி 33 பிரபல ரவுடி இவர் இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு மாநில துணைத்தலைவராக இருந்து வருகிறார்.

பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி நகை பறிப்பு அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

பிரபல ரவுடி பிரம்மமூர்த்தி மீது 54 வழக்குகள் உள்ளது. சென்னை சேலம் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.

இவரை போலீசார் தேடி வந்த நிலையில்
செவ்வாய்பேட்டை போலீசார் சேலம் அரசு மருத்துவமனை அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அவ்வழியாக வந்த பிரம்ம மூர்த்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்

இதனிடையே கைது செய்யப்பட்டதை அறிந்த பிரம்ம மூர்த்தியின் ஆதரவாளர்கள் ஏராளமான செவ்வாய்பேட்டை காவல் இணையத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

அங்கு கோஷங்களை எழுப்பினர் இதனால் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்ட பிரம்ம மூர்த்தியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஆனால் போலீசார் பிரம்ம மூர்த்தியை விட மறுத்து முற்றுகை ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது என்றும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து முற்றுகை ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இவர் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி செவ்வாய்பேட்டை பகுதியில் இருதரப்பின் இடையே ஏற்பட்ட போது ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரம்மமூர்த்தி தலைமறைவாக இருந்ததும் இவர் மீது சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது கொலை முயற்சிக்கு உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!