பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!!
31 January 2021, 1:11 pmQuick Share
சென்னை: மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 14ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டமான, வண்ணாரப் பேட்டை-திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.
காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவதுடன், மேலும் பல்வேறு திங்டங்களையும் துவக்கி வைக்க உள்ளார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அழைப்பு விடுத்த நிலையில், பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Views: - 0
0
0