தவறி விழுந்த பெண்ணின் கால்கள் மீது ஏறிய தனியார் பேருந்து.. கோபத்தில் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 8:12 pm

திருச்சி ; திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் பேருந்து தவறி விழுந்த பெண் கால்களில் ஏறி இறங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது, ராங் ரூட்டில் வந்த அந்த தனியார் பேருந்து அவரை கவனிக்காமல் வண்டியை எடுத்துவிட்டார்.

இதனால் முன்பக்க படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்த நிர்மலாவின் இரண்டு கால்களிலும் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின. வழியில் அலறி துடித்த அவரைக் கண்டு அப்பகுதி இருந்த மக்கள் கோபமடைந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனவர்களை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நிர்மலாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இச்சம்பத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!