கோவையில் மாயமான 12 வயது சிறுமி பத்திரமாக மீட்பு… வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னணி என்ன..? போலீசார் விசாரணையில் பகீர்..!!
Author: Babu Lakshmanan19 May 2023, 9:01 am
கோவை ; கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் பத்திரமாக நேற்று மீட்கப்பட்டார்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் சுதாகரன். இவரது மகன் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி. இவர் நேற்று முன்தினம் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்த போது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் ஆறு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது என தகவல்கள் வெளியாகியது. அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது, அவர் எங்கு இறங்கினார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வந்தனர். இதனிடையே, சிறுமி கிடைத்து விட்டதாக தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
பின்னர், இதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், சிறுமியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக விளக்கம் கொடுத்திருந்தனர். மேலும், இந்தப் போலியான தகவலை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். பின்னர், பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். இதனிடையே, வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
0
0