வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்… தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 May 2024, 2:27 pm

வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்… தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் தனக்கு தெரிந்த இளம் பெண்ணுக்கு ஓசூரில் வேலை பெற்று கொடுக்கும்படி மணிகண்டனை நாடி உள்ளார்.

இதனையடுத்து மணிகண்டனும் அந்த இளம் பெண்ணிடம் செல்போனில் பேசி ஒசூருக்கு அழைத்துள்ளார். ஓசூருக்கு வந்த அந்த இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய மணிகண்டன் அவரை ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுது அவரிடமிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் பொதுமக்கள் உதவியுடன் ஓசூர் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டனை கைது செய்தனர். இதனையடுத்து அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!